ஸ்ரீவில்லிபுத்தூர், சுழற்சங்கம் சார்பில் தொழிலில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சுழற்சங்கத் தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் முனிராஜ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் இதயம் நல்லெண்ணெய் அதிபர் மேஜர் டோனர் வி.ஆர்.முத்து கலந்து கொண்டு தொழிலில் சாதனைகள் படைத்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர் காளிராஜைப் பாராட்டி விருது வழங்கினார். முன்னதாக எம்.கே.எம்.ரபீக், உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
உறுப்பினர் லட்சுமணன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியினை சுழற்சங்க உறுப்பினர் முத்து தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர அனைத்து சுழற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செயலர் மதிவாணன் நன்றி கூறினார்.