ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி வேதியியல் துறை சார்பில், கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர்

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி வேதியியல் துறை சார்பில், கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் த. பழனீஸ்வரி தலைமை வகித்தார். இதில், மதுரை சரஸ்வதி நாராயணன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப் பேராசியர் ஏ. குபேந்திரன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சி. அமிர்தவள்ளி, காளீஸ்வரி கல்லூரி உதவிப் பேராசிரியர் பி. காளீஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
முன்னதாக, துறைத் தலைவர் மா.சௌதாமணி வரவேற்றார். மா.முருகலட்சுமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com