மறவர்பெருங்குடியில் சேதமடைந்த உப்போடை பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மறவர்பெருங்குடியில் சேதமடைந்துள்ள பாலத்தை விரைந்து சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மறவர்பெருங்குடியில் சேதமடைந்துள்ள பாலத்தை விரைந்து சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 திருச்சுழி வட்டம் மறவர்பெருங்குடியிலிருந்து ம.ரெட்டியபட்டி நோக்கிச் செல்லும் சாலையில் ஓராண்டுக்கு முன்னர் அங்குள்ள உப்போடை மீது பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த சில மாதங்களிலேயே முன்பகுதியில் சாலை இணையும் இடத்திலிருந்த கான்கிரீட் பெயர்ந்து அதனுள்ளிருக்கும் கட்டுமானக் கம்பிகள் வெளித்தெரியத் தொடங்கின.
 தற்போது இப்பாலத்தின் பெரும் பகுதி சேதமடைந்து குண்டும்குழியுமாகி விட்டதுடன் போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் ஆகிவிட்டது. இச்சாலையானது மறவர்பெருங்குடி மட்டுமல்லாது மீனாட்சி புரம், வெள்ளையாபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை ம.ரெட்டியபட்டி வழியாக அருப்புக்கோட்டையை இணைக்கிறது. இதனால் அதிகம் போக்குவரத்து உள்ள இச்சாலையில் தான் பள்ளிமாணவர்களும் நாள்தோறும் சைக்கிளில் சென்றுவருகின்றனர். 
 எனவே இப்பாலத்தைச் சீரமைக்க மறவர்பெருங்குடி ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே பொதுக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி சேதமடைந்துள்ள உப்போடைப்பாலத்தை விரைவில் சீரமைக்க மீண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com