திருச்சுழியில் பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் புதன்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் புதன்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது.
திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை நண்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய, அதிக காற்று வீசாமல்,  சுமார் முக்கால் மணிநேரம் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை காரணமாக திருச்சுழி நகரின் பிரதானச் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி திருச்சுழி நகர், பள்ளிமடம், தமிழ்ப்பாடி,சித்தலக்குண்டு, மிதலைக்குளம் ஆகிய சுற்று வட்டாரக் கிராமங்களிலும் மழை பெய்தது. மழைக்குப்பின் வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com