ராஜபாளையம் அருகே இரும்பு வியாபாரி மாயம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பழைய இரும்பு வியாபாரி மாயமானதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே பழைய இரும்பு வியாபாரி மாயமானதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் பூவிழி(28). இவருக்கும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த துளசிராமன்(34) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 
கொடைக்கானலில் இரும்பு கடை நடத்தி வந்த துளசிராமன், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் சேத்தூர் பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கொடைக்கானலுக்கு சென்று இரும்பு கடையை திறக்கப் போவதாக துளசிராமன் கூறிவிட்டுச் சென்றாராம்.   அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை என பூவிழி சேத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com