அருப்புக்கோட்டை கோயில்களில்  மழை வேண்டி தேவாரப்பாராயணம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவன் விநாயகர் கோயிலில் மழை வேண்டி  யாகம் மற்றும் தேவாரப் பாராயண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவன் விநாயகர் கோயிலில் மழை வேண்டி  யாகம் மற்றும் தேவாரப் பாராயண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், சிவன் விநாயகர் கோயில்களின் சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் கும்பங்களில் புனித நீர் நிரப்பி மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது  யாகம் வளர்க்கப்பட்டு வேத பாராயணம் மற்றும் தேவாரப் பாராயணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மழைவேண்டி  சிவன் விநாயகருக்கும், ஆயிரங்கண் மாரியம்மனுக்கும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் கோயில்களின் நிர்வாகி என்.ஏ.சுப்பிரமணியம் சார்பில் வாஸ்து நிபுணர் அண்ணாமலை செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com