விருதுநகர்
சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆனி மாத முப்பழ பூஜை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்குவெங்கா நல்லூர் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆனி மாத முப்பழ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலையில் சுவாமி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்குவெங்கா நல்லூர் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆனி மாத முப்பழ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலையில் சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து சிறப்பு முப்பழ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.