சிவகாசியில் நகை திருடிய இளைஞர் கைது

சிவகாசியில் நகைக் கடையில் நகை திருடிய இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சிவகாசியில் நகைக் கடையில் நகை திருடிய இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி தெற்கு ரத வீதியில் நகைக் கடை வைத்திருப்பவர் சந்தனகோபால் (55). இவரது நகை கடைக்கு வந்த ஒருவர் நகை வாங்குவது போல நடித்துவிட்டு, பின்னர் கடையை விட்டு வெளியேற முயன்றார். அப்போது விற்பனைக்காக காட்டிய நகைகளில் 2 பவுன் நகை மாயமானதை கண்டறிந்த ஊழியர், அந்த நபரை விரட்டிப் பிடித்தார். விசாரணையில் அவர் சாட்சியாபுரம் ஆயில் மில்காலனி மன்சூர் மகன் ஜாபர் (22) என தெரிய வந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com