ராஜபாளையத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

 ராஜபாளையத்தில் சாலைகளில் உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதாகவும் அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 ராஜபாளையத்தில் சாலைகளில் உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதாகவும் அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் நகராட்சியில் தாமிரவருணி குடிநீர் பணிகளுக்காக முகில் வண்ணம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தோண்டி மூடிய  சாலைகளில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலைகளில் தூசு அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com