தீ விபத்தில் தொழிலாளி பலி
By DIN | Published On : 24th July 2019 07:01 AM | Last Updated : 24th July 2019 07:01 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
விருதுநகர் ஆர்.ஆர். நகர் அருகே உள்ள கோயில் புலிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (32). தனியார் சிமெண்ட் ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இவர் கடந்த வியாழக்கிழமை பழுதான இரு சக்கர வாகனத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிகரெட் புகைத்தவாறு பெட்ரோல் நனைத்த துணியால் வாகனத்தை துடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த மாரிமுத்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு மாரிமுத்து உயிரிழந்தார். அவரது மனைவி ராஜி, அளித்தப் புகாரின்பேரில் வச்சகாரபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.