ராஜபாளையத்தில் உள்ள கோயில்களில் ஆடி மாத கார்த்திகை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் பூபால் பட்டி தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயிலில் சுவாமிக்கு 18 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சஞ்சீவி மலை குமாரசுவாமி கோயில், அம்பலபுளி பஜார் குருசாமி கோயில், கொம்புச்சாமி கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மாயூரநாதசுவாமி கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயிலிலும் ஆடி கார்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.