முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது
By DIN | Published On : 30th July 2019 08:58 AM | Last Updated : 30th July 2019 08:58 AM | அ+அ அ- |

திருத்தங்கலில் முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 3 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் பராசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் (22). இவருக்கும், முத்துமாரி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் அருள்வாழைப்பாண்டி (23) என்பவருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷ் தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த அருள்வாழைப்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் அந்தோணி மகன் ஜெகன் (24), ராமர் மகன் கார்த்திக் (21) ஆகிய 3 பேரும் சேர்ந்து, சுரேஷை அரிவாளால் வெட்டியும், பீர் பாட்டில் மற்றும் கத்தியால் குத்தினராம். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த 3 பேரையும் கைது செய்தனர்.