ராஜபாளையத்தில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை, போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையம் சக்கரராஜாகோட்டை பெரிய தெருவைச் சேர்ந்தவர் சங்கையா.
இவரது மகள் கிருஷ்ணவேணி, அப்பகுதியில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். புதன்கிழமை மதியம் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த மர்ம நபர் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.
உடனே, கிருஷ்ணவேணி சத்தம் போட்டுள்ளார். அதையடுத்து, அவரது தந்தை விரட்டிச் சென்று நகையை பறித்தவரை பிடித்தார். பின்னர், அவரை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தெற்கு அண்ணா நகர் முனியாண்டி கோயில் தெருவைச் சேர்ந்த சங்கிலி காளை (28) என்பது தெரியவந்தது.
அவரை போலீஸார் கைது செய்தனர்.