சாத்தூர் அருகே மதுபோதையில் கடைகாரர் மற்றும் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிற்பிபாறை பகுதியைச் சேர்ந்த தங்கதுரை (33), ரமேஷ்குமார் (32), எல்லை பாதுகாப்பு படை வீரர் மாரிச்சாமி(28) ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை காலை ஏழாயிரம் பண்ணை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள கடையில் மதுபோதையில் புகையிலை கேட்டனராம். கடைக்காரர் தர மறுத்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு தகவலறிந்து வந்த ஏழாயிரம் பண்ணை போலீஸார் மூவரையும் பிடித்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனராம்.
இதையடுத்து தங்கதுரை, ரமேஷ்குமார், மாரிச்சாமி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.