சிவகாசி அருகே வீட்டில் நகை, கார் திருட்டு

சிவகாசி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து

சிவகாசி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டுள்ளதாக போலீஸில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே கங்காகுளம் கிராமத்தில் உள்ள முத்துநகரைச் சேர்ந்தவர் லட்சம். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் இயந்திரம் சொந்தமாக வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி சுசிதா (30) கடந்த சில நாள்களுக்கு முன்னர் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் வெள்ளிக்கிழமை லட்சம் வீட்டை பூட்டிவிட்டு தொழில் நிமித்தமாக கொல்கத்தா சென்றுவிட்டார். இதையடுத்து திங்கள்கிழமை லட்சத்தின் சகோதரர் வைரப்பிரகாசம், வீட்டுத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு வந்தாராம். அப்போது பிரதான கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டின் பிரதான மரக்கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. 
இதையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சுசிதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 4 பவுன் நகை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மற்ற நகைகளை சுசிதா உறவினர் வீட்டிற்கு சென்ற போது எடுத்துச் சென்றுவிட்டாராம். மேலும் பீரோவில் வைத்திருந்த காரின் சாவியையும் காணவில்லை. காரையும் காணவிலை என தெரிய வந்தது.
இதுகுறித்து சுசிதா அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு 
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com