ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 25th June 2019 07:22 AM | Last Updated : 25th June 2019 07:22 AM | அ+அ அ- |

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்
படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் தாய்மார்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
எனவே இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.