சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நாட்டுப்புறக் கலைகள் பயிற்சிமுகாம் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் செ.அசோக் தலைமை வகித்தார்.
முதுகலை தமிழ்த்துறைத் தலைவர் க.சிவனேசன் முன்னிலை வகித்தார். தென்காசி நுண்கலை கழக அறக்கட்டளை இயக்குநர் ஞா.சுதாகர், பயிற்சியைத் தொடக்கி வைத்து பேசினார்.
பயிற்சியாளர்கள் த.முருகன், கரு.சந்தானம், மா.வேல்முருகன் ஆகியோர் நாட்டுப்புற கலைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி முகாம் ஜூன் 27 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. முன்னதாக உதவிப் பேராசிரியர் ந.அருள்மொழி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ம.இன்பராஜ் நன்றி கூறினார்.