சிவகாசியில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

சிவகாசி திருவள்ளுவர் மன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

சிவகாசி திருவள்ளுவர் மன்றம் சார்பில் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
விநாயகா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அந்த மன்றத்தின் தலைவர் சேர்மதுரை தலைமை வகித்தார்.   இப்போட்டியில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி என மொத்தம் 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். "பணியுமா என்றும் பெருமை' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில், சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா முதலிடமும், அதே பள்ளி மாணவி சோபனா இரண்டாமிடமும், விநாயகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.யோகாஷ்குமார் மூன்றாமிடமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் சங்கத்தின் துணத்தலைவர் குருநாதன், மூத்தோர் குடிமக்கள் சங்கத்தலைவர் முருகேசன், செயலாளர் சங்கையா, ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் செல்வராஜ், பள்ளி முதல்வர் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செயலாளர் எஸ்.ஏ.மோகன் வரவேற்றார். துணைத் தலைவர் காளிராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com