பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். இதில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். மேலும், இச்சம்பவத்தில் பின்புலமாக செயல்பட கூடியவர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் பேசினர். இதில், இக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் பாத்திமா மேரி தலைமை வகித்தார். மாநில செயற் குழு உறுப்பினர் அய்யம்மாள் கண்டன உரையாற்றினர். முடிவில் கிளைச் செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.