ராஜபாளையத்தில் காரல் மார்க்ஸ்  நினைவு நாள் பேரவைக் கூட்டம்

ராஜபாளையத்தில் காரல் மார்க்ஸ் 137 ஆவது ஆண்டு நினைவு நாள் பேரவைக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ராஜபாளையத்தில் காரல் மார்க்ஸ் 137 ஆவது ஆண்டு நினைவு நாள் பேரவைக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதற்கு  நகரச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். அக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன் காரல் மார்க்ஸின் கொள்கை, போராட்டம், வாழ்க்கை வரலாறு குறித்தும், மக்களவைத் தேர்தலில் கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். 
மேலும் மாநிலக் குழு உறுப்பினரான முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்  தி.ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் வெ.அழகிரிசாமி, பொ.லிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் பழனிக்குமார், மேற்கு ஒன்றியச் செயலாளர் வீராச்சாமி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் முத்துமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com