விருதுநகர் ரயில் நிலையத்தில், ரயில் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரயில்வே காவல் ஆய்வாளர் குருசாமி தலைமையிலான போலீஸார் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரயிலில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதை அறிந்தால் புதிய செயலியில் புகார் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து ரகசியம் காப்பதுடன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரயில்வே போலீஸார் விளக்கினர்.
விருதுநகர் ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.