இரு சக்கர வாகனத்துக்கு தீ வைப்பு: சிறுவன் மீது வழக்கு

விருதுநகர் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்ததாக சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


விருதுநகர் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இரு சக்கர வாகனத்துக்கு தீ வைத்ததாக சிறுவன் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த சரவணன் மகன் மணி கண்டன் (21). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தினார். இந்நிலையில், நள்ளிரவில் அந்த வாகனம் தீயில் எரிவதைக் கண்டு அவரது தாயார், மகனிடம் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து மணிகண்டன் வெளியில் வந்து பார்த்தபோது, பாண்டியன் நகர் மல்லி கிட்டங்கி தெருவை சேர்ந்த சிறுவன், வாகனத்துக்கு தீ வைத்தது தெரிய வந்தது. 
இது குறித்து மணிகண்டன் அளித்தப் புகாரின் பேரில் அச்சிறுவன் மீது பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com