ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை, இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, உலகாணித் தெருவைச் சேர்ந்தவர் ரா.சேதுமாதவன் (59). இவரது மனைவி தரணி. இருவரும் ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது ஒரே மகள் மகாலட்சுமி (24). திருமணம் ஆகவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன் தரணிக்கு இருதய நோய் இருப்பது தெரியவந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த இரு நாள்களுக்கு முன்னர் மருத்துவர்கள் தரணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.