சிவகாசி அருகே முள்புதரில் வீசப்பட்ட குழந்தையை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
சிவகாசி அருகே ஏ.லட்சுமியாபுரத்தில் ஒரு முள்புதரில் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது துணியில் சுற்றப்பட்டு, பெண்
குழந்தை ஒன்று புதரில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்குழந்தையை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அக்குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே புதரில் வீசப்பட்டிருக்கலாம் என்றும், தற்போது குழந்தை முழுமையான உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை முள்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.