சாத்தூரில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சாத்தூரில் உள்ள பழைய படந்தால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


சாத்தூரில் உள்ள பழைய படந்தால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பழைய படந்தால் சாலையானது, கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இச்சாலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.  இந்நிலையில், தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த வாரம், இச்சாலையில் உள்ள வாருகாலில் லாரி டயர் சிக்கி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
அதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் இந்தப் பள்ளத்தை தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். இதனால், இப்பகுதியில் கனரக வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பழைய படந்தால் சாலையை சீரமைப்பதுடன், வாருகாலையும் நிரந்தரமாக மூடவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com