சிவகாசியில் அச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 06th May 2019 12:58 AM | Last Updated : 06th May 2019 12:58 AM | அ+அ அ- |

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சிவகாசி மீனாட்சி காலனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முத்து (47). அச்சுத் தொழிலாளியான இவருக்கு மனைவி பிரேமா (37) மற்றும் 2 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், முத்து தினசரி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.