முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
அருப்புக்கோட்டையில் விபத்து: முதியவர் பலி
By DIN | Published On : 15th May 2019 07:01 AM | Last Updated : 15th May 2019 07:01 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோணை (75). இவர் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை அருகே உள்ள காந்திநகர் சென்றுவிட்டு, மீண்டும் அன்று மதியம் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். காந்திநகர் மேம்பாலம் அருகே லாரி ஒன்று அவரை முந்திச்செல்ல முயன்றதாம். இதில் திடீரென நிலைதடுமாறிய சோணை லாரியினடியில் விழுந்ததில், லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்குவந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் சோணையின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.