சிவகாசியில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசியில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிவகாசியில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த கடும் வெப்பநிலையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சிவகாசி பகுதியில் புதன்கிழமை மாலை 5.10 மணி முதல் 6 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளான சிவகாசி - திருத்தங்கல் சாலை, சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை, சிவகாசி-விளாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. 
மேலும் என்.ஆர்.கே.ஆர்.வீதி, சிவன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கிய குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் கழிவு நீர், மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com