திருச்சுழியில் ஆயுதங்களுடன் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் வாகன சோதனையில்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல்துறையினரின் வாகன சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி திருடர்கள் 3 பேர் சிக்கினர்.
திருச்சுழி மற்றும் கமுதி வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் காவல்துறைக்கு வந்தன. இதையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின்படியும், திருச்சுழி காவல்துணைக் கண்காணிப்பாளர் சசிதரன் ஆலோசனைப்படியும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இதனிடையே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் திருச்சுழி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்த உடையப்பன் என்கிற வெற்றிவேல் (51), ராமநாதபுரம் மாவட்டம் மறைக்குளத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (23), கடலாடியைச் சேர்ந்த சண்முகையா பாண்டி (22) ஆகியோர் என்பதும் இந்த மூவரும் தான் கடந்த சில நாள்களுக்கு முன்னர் இலுப்பையூர் அருகே தம்பதியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு நகை, பணம் மற்றும் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தப்பியவர்கள் என்பதும் தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் மூவரையும் கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் , மேலும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com