முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு
By DIN | Published On : 18th May 2019 07:28 AM | Last Updated : 18th May 2019 07:28 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் மேட்டுத்தொட்டியான்குளத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், சீரான இடைவெளியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மேட்டுத்தொட்டியான்குளம் கிராமத்தில் 1,200 பேருக்கும் மேல் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் 15 அல்லது 30 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். மேலும், குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.
சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்க செம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே, வாரம் ஒருமுறை வீதம் சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்க மேட்டுத்தொட்டியான்குளம் கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.