மரங்களிடையே செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்

விருதுநகர்-சிவகாசி செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன.

விருதுநகர்-சிவகாசி செல்லும் சாலையின் இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கிடையே மின்கம்பிகள் செல்கின்றன. இப்பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தால், மின்கம்பிகள் அறுந்து விழுந்து, மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதியில் மின் கம்பிகள் அறுந்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் மீது விழும் அபாயமும் உள்ளது. 
     எனவே, மாதாந்திர பராமரிப்புப் பணிகளின்போது, இதுபோன்று மரங்களுக்கிடையே செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழாத வகையில், மாவட்ட மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com