விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோயில்களில் பெளர்ணமி மற்றும் வைகாசி விசாக சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாத சுவாமி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அம்பலப்புளி பஜார் சுப்பிரமணியர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள்
நடைபெற்றன.