சிவகாசியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குழந்தை வேலன் காவடித் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி காத்த நாடார் தெரு முத்தாலம்மன் கோயிலில் இருந்து சிறுவர், சிறுமியர் காவடி சுமந்து, சிவசுப்பிரமணியன் கோயில், பத்திர காளியம்மன் கோயில், திருத்தங்கல் ஐயா நாராயணசுவாமி கோயில்
ஆகிய கோயில்களுக்குச் சென்றனர். இதனைத்தொடர்ந்து திருத்தங்கல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவடியை இறக்கி வைத்து சுவாமியை வழிபட்டனர். இதில் சுமார் 48 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை வி.சி.டி. கதிரேசன், கே.சமுத்திரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.