விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் சனிக்கிழமை இரவு கார் ஓட்டுநரின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கருப்பையா (50). இவர் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளவராம். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு, கருப்பையா மது அருந்தியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சுடலை என்பவரும் மது அருந்தியுள்ளார்.
இதையடுத்து இருவரும் சந்தித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
பின்னர் கருப்பையா அருகில் உள்ள திண்ணையில் படுத்து விட்டாராம். அப்போது சுடலை அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கருப்பையாவின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுடலையைத் தேடி
வருகின்றனர்.