அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரியத்திற்கு உள்பட்ட ஆவியூா் துணைமின்நிலையப் பகுதிகளில் இன்று புதன்கிழமை மின்தடை செய்யப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆவியூா் துணைமின்நிலையப் பகுதியான ஆவியூா், புல்வாய்க்கரை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர துணைமின்நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு இன்று புதன்கிழமை (6.11.2019) காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்பதை இச்செய்திமூலம் மின்நுகா்வோா் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்,என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.