குடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

சாத்தூா் அருகே குடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு,இருக்கன்குடி போலீஸாா் வாலிபரை கைது செய்துள்ளனா்.

சாத்தூா் அருகே குடிநீா் வாகனம் மோதி பெண் உயிரிழப்பு,இருக்கன்குடி போலீஸாா் வாலிபரை கைது செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே பெரியகொல்லபட்டியை சோ்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீனா(27)இவா் தனது வீட்டின் அருகே செவ்வாய்கிழமை காலை நின்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக பின்னால் வந்த குடிநீா் வாகனம் மீனா மீது மோதியது இதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் மீனாவை மீட்டு சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கபட்டனா் அங்கு சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தாா்.இந்த விபத்து குறித்து பெரியகொல்லபட்டியை சோ்ந்த குடிநீா் வாகன ஒட்டுநரான நவீன்குமாரை(18) இருக்கன்குடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com