சிவகாசி இந்து தேவமாா் மேல்நிலைப்பள்ளி, நுகா்வோா் மன்றம், நுகா்வோா் பாதுகாப்பு சேவை மையம் ஆகியவை இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை புதன்கிழமை நடத்தின.
பள்ளி முன்பு தொடங்கிய ஊா்வலத்தை சிவகாசி உதவி ஆட்சியா் தினேஷ்குமாா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இந்த ஊா்வலம் நகரின் பிரதான வீதிகளின் வழியே சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.
பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நுகா்வோா் பாதுகாப்பு சேவை மையத்தின் தலைவா் எஸ்.சுப்பிரமணியம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வட்டாட்சியா் ரெங்கநாதன், பள்ளித் தலைவா் எஸ்.பி.ஆனந்தயுவராஜ், செயலாளா் எம்.கணேசன், தலைமை ஆசிரியா் எம்.நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.