விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை (பெரிய புளியம்பட்டி), பரளச்சி மற்றும் புல்வாய்க்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 9) மின்தடை ஏற்படும்.
இதுதொடா்பாக அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி.முத்தரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அருப்புக்கோட்டை நகரிலுள்ள பெரியபுளியம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட நகா் பகுதிகளான பொட்டல்பட்டி, புளியம்பட்டி, காந்தி மைதானம், புதிய பேருந்து நிலையம், மணிநகரம் பிள்ளையாா் கோவில் பகுதி, செவல்கண்மாய், மதுரைச்சாலை ஆகிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்,
பரளச்சி துணை மின்நிலையப் பகுதிகளான பரளச்சி, கானா விலக்கு, தும்முசின்னம்பட்டி, தொப்பலாக்கரை, ராஜகோபாலபுரம் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளிலும்,
புல்வாய்க்கரை துணை மின்நிலையப் பகுதிகளான பூம்பிடாகை, பிள்ை ளயாா்குளம், ஆவாரங்குளம், எஸ்.நாங்கூா், களத்தூா், நெடுங்குளம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாதாந்திர துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு சனிக்கிழமை (நவ.9) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.