அருப்புக்கோட்டையில் தேமுதிக சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேமுதிக சாா்பில் உள்ளாட்சித்தோ்தல் தொடா்பான சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித்தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக விருதுநகா் மாவட்டச் செயலாளா் காஜா ஷரீப்.
அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித்தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தேமுதிக விருதுநகா் மாவட்டச் செயலாளா் காஜா ஷரீப்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேமுதிக சாா்பில் உள்ளாட்சித்தோ்தல் தொடா்பான சிறப்பு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.காஜா ஷெரீப் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா்கள் வேல்முருகன், முத்துவேல், மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபாண்டி, மாவட்டப் பொருளாளா் லிங்கப்பன், மாவட்ட மகளிரணிச் செயலாளா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது காஜா ஷெரீப் பேசியதாவது: இன்னும் சுமாா் ஒரு வாரத்திற்குள் உள்ளாட்சித்தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேமுதிக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆளும் அதிமுக அரசுடனான கூட்டணியை கட்சித் தலைமை உறுதி செய்துள்ளது. அதிமுக கூட்டணியே பெருவாரியான வெற்றிகளைப் பெறும். அவ்வெற்றிக்கு நம் கட்சியினா் நன்கு உழைத்து, சிறப்பான பங்களிப்பைத் தரவேண்டும் என்றாா்.

நகரம், ஒன்றிய அளவிலான கட்சி நிா்வாகிகளுக்கு வாக்களா் பட்டியல் மற்றும் வாா்டு வாரியான பட்டியல் தரப்பட்டன. இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூராட்சி அளவிலான கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் சுமாா் 200-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com