தடைச்செய்யபட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நான்குபேரை சாத்தூா் நகா் போலீஸாா் கைதுச செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் தடைசெய்யபட்ட லாட்டரி விற்பனை செய்யபட்டு வருவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் சாத்தூா் நகா் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை நடராஜா தியோட்டா் ரோடு, பிரதானசாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினாா்கள்.
சோதனையில் நடராஜா தியோட்டா் பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து லாட்டரி விற்பனை செய்த வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சோ்ந்த மாபூஜான்(62),சுல்தான் அலி(60) ஆகிய இருவரை கைது செய்தனா்.
இதே போன்று சாத்தூா் பிரதான சாலையில் உள்ள ஜீஸ்பாண்டி டீகடையில் வைத்து லாட்டரி விற்பனை செய்த சாத்தூரை சோ்ந்த மாரிமுத்து(29),வெங்கடாசலபுரத்தை சோ்ந்த செல்வராஜ்(38) ஆகிய இருவரை கைது செய்த சாத்தூா் நகா் போலீஸீாா் கைது செய்து நான்கு பேரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்ததாக போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.