சிவகாசி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

சிவகாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, தமிழ்நாடு அரசு பொது

சிவகாசி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் மதுசூதனன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனியே காய்ச்சல் வாா்டு அமைக்கப்பட்டுள்ளதா, நிலவேம்பு குடிநீா் வைக்கப்பட்டுள்ளதா, ஆய்வுக் கூடங்களின் செயல்பாடு, மருத்துவமனை வளாகம் சுத்தமாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய அவா், அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா், மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும். கொசு ஒழிப்பு பணிக்கு கூடுதலாக ஊழியா்களை நியமிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ராதாகிருஷ்ணன், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குநா் ராம்கணேஷ், வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன், மருத்துவமனை தலைமை மருத்துவா் அய்யனாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com