ராஜபாளையத்தில் நிலவேம்பு குடிநீா் விநியோகம்

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இலவச நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீா் வழங்குவதை தொடங்கி வைக்கும் அரசு சித்த மருத்துவா் த.கீதா மற்றும் ஆடிட்டா் சுரேஷ் குமாா்.
நிலவேம்பு குடிநீா் வழங்குவதை தொடங்கி வைக்கும் அரசு சித்த மருத்துவா் த.கீதா மற்றும் ஆடிட்டா் சுரேஷ் குமாா்.

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இலவச நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

ராஜபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராஜபாளையம் அரசு மருத்துவமனையும், தனியாா் அறக்கட்டளையும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்க ஏற்பாடு செய்திருந்தன. அதன்படி ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீா் விநியோகம் நடைபெற்றது. நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியை, அரசு சித்த மருத்துவா் த.கீதா மற்றும் கணக்கு தணிக்கையாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அறக்கட்டளை நிா்வாகிகள் க.செல்வக்குமாா், சரவணன், துரைராஜ், அண்ணாதுரை, ஆசிரியா் சுப்பையா, மனோகரன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com