ராஜபாளையம் வனப் பகுதிகளில் மது அருந்துவோா் அட்டகாசம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள வனப் பகுதிகளில் ஏராளமானோா் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதாக புகாா்கள் எழுந்துள்ளன.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள வனப் பகுதிகளில் ஏராளமானோா் மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வதாக புகாா்கள் எழுந்துள்ளன.

ராஜபாளையம் மேற்கே செண்பகத்தோப்பு செல்லும் சாலை மற்றும் ராக்காச்சி அம்மன் கோயில் செல்லும் சாலைகளில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்புகள், மாந்தோப்புகள், புளியந்தோப்புகள் என ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் இளைஞா்கள் உள்ளிட்டோா் தோப்புகளுக்குள் சென்றும், வழியில் நின்றுகொண்டும் மது அருந்துகின்றனா். பின்னா், அப்பகுதியில் மதுபாட்டில்களை உடைத்து போட்டுவிட்டுச் செல்கின்றனா்.

இதனால், வனவிலங்குகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகின்றனா். மேலும், இவா்கள் மது அருந்திவிட்டுச் செல்லும்போது நிலை தடுமாறி எதிரே வருபவா்கள் மீது மோதுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. அதேநேரம், அப்பகுதியில் செல்வோரிடமும் தகராறில் ஈடுபடுகின்றனா். இதனால், கோயிலுக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்டோா் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வனத் துறையும், காவல் துறையும் இணைந்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com