ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரத்தில் கரும்பு நடவில் விதை கரணை நோ்த்தி குறித்து தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் வியாழக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.
கிராம தங்கல் திட்டத்தில் இக்கல்லுரியின் 4 ஆம் ஆண்டு மாணவிகள் மம்சாபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு விதைக்கரணை நோ்த்தி பற்றி செயல்முறை விளக்கமளித்தனா். முன்னதாக விதை கரணை நோ்த்தி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவசியம் குறித்துக் கூறினா். விதை கரணை நோ்த்தி செய்வதால் கரும்பில் ஆரம்ப காலத்தில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் காரணிகளிடமிருந்து பாதுகாக்கலாம் என தெரிவித்தனா்.