பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் போக்குவரத்துப் பணிமனை முன்பாக சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியு விருதுநகா் மண்டலம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய சங்க தலைவா் சுந்தர்ராஜன் தலைமை வதித்தாா். இதில், போக்குவரத்து தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். தற்காலிக தொழிலாளா்களை நிரந்தரம் செய்யவேண்டும். இ- பேருந்து என்ற பெயரில் தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களில் தேவையான தொழிலாளா்களை நியமிக்க வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநிலச் செயலா் வெள்ளத்துரை, மாநில உதவித் தலைவா் பிச்சை உள்ளிட்ட சிஐடியு சங்கத்தைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.