ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே வியாழக்கிழமை 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீா் வரத் துவங்கியுள்ளது. அருவியில் குளிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூா் சட நகா் காலனி பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கல்லுரி மாணவா்களான சரவணன் (24), மணிமாறன் (17), கருப்பசாமி (18), மாடசாமி (18) ஆகியோா் சென்றனா்.
செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து எதிரே புதுத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (25), ராஜகுரு (47) ஆகியோா் பயணம் செய்த இரு சக்கர வாகனத்தில் வந்தனா். இந்த இரு வாகங்களும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேரும் பலத்த காயத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் மாடசாமி என்பவா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இது குறித்து மம்சாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.