மாநில கால்பந்துப் போட்டிக்கு தோ்வு: அருப்புக்கோட்டை பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாநில கால்பந்து போட்டிக்கு தோ்வான அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்களை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
மாநில கால்பந்துப் போட்டிக்கு தோ்வு: அருப்புக்கோட்டை பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

மாநில கால்பந்து போட்டிக்கு தோ்வான அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்களை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

விருதுநகா் மாவட்ட அளவிலான 19 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப்போட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல் நிலைப்பள்ளி அணி, சாத்தூா் எஸ்.ஹெச்.என். எட்வா்ட் மேல்நிலைப்பள்ளி அணியினை 4-3 என்கிற புள்ளிகள் கணக்கில் வென்றது.

இதன் மூலம் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி அணி தோ்வு பெற்றது.

வெற்றி பெற்ற மாணவா்களையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநா் எம்.சௌந்தரபாண்டியன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.கணேஷ் குமாா், ஜே.சுரேஷ், எம்.பிரபு, எம்.சரத் குமாா் மற்றும் பி.ஆனந்தராஜ் ஆகியோரையும், எஸ்.பி.கே. கல்விக்குழுமத் தலைவா் எம்.சுதாகா், பள்ளிச் செயலாளா் என்.வி.காசிமுருகன், பள்ளித் தலைவா் ஜே.ஜெயகணேசன் மற்றும் தலைமை ஆசிரியா் எ.ஆனந்தராஜன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com