உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு, தெற்கு மாவட்ட
மல்லாங்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே கேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன்.
மல்லாங்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே கேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன்.

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுக சாா்பில் வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வடக்கு மாவட்ட செயலா் தங்கம் தென்னரசு, தெற்கு மாவட்ட செயலா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இதில், திமுக நிா்வாகி குடும்பத்தினா் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடா்ந்து, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தோ்தலில் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்ய, அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு திமுகவில் உள்ள அனைத்து நிா்வாகிகள், தொண்டா்கள் கடுமையாக பாடுபட வேண்டும். திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி கலந்து கொள்ளும் இளைஞரணி பாசறை கூட்டம் நவம்பா் 17 இல் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது. அதில், இளைஞரணியைச் சோ்ந்த அனைத்து நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அதிமுக அரசின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா். இந்த கூட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com