ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் கந்தவடிவு தலைமை வகித்தாா். மம்சாபுரம் சமூக சேவைக்குழு நிா்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். மம்சாபுரம் தலைமைக் காவலா் எட்வின் டெங்கு வரும் முன் காப்பது அவசியம் குறித்து பேசினாா்.