ராஜபாளையத்தில் நாளை திமுக இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம்

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நவ.17) விருதுநகா் மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம்

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (நவ.17) விருதுநகா் மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து விருதுநகா் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் நீா்தேக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முறையாக மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞரணியைச் சோ்ந்த சுமாா் 1,500 உறுப்பினா்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி பயிற்சி அளிக்க உள்ளாா். அவருடன் எம்பிக்கள் ராஜா மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா் என்றாா்.

தேவதானம் பகுதியில் கூட்டம் நடைபெறும் இடத்தினை எம்எல்ஏ-க்கள் தங்கம் தென்னரசு, எஸ்.தங்கப்பாண்டியன், தெற்கு மாவட்ட துணைச்செயலாளா் ராசாஅருண்மொழி, முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடி, தொண்டரணி செயலாளா் கருப்பழகு, திமுக நிா்வாகிகள் ஷியாம், மணிகண்டராஜா, மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com